எல் நினோ தாக்கம்: இலங்கையில் 2.5 இலட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம்
எல் நினோ காலநிலை தாக்கத்துடன் வலுப்பெற்று வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, இலங்கையில் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அரசாங்கத்தின் மதிப்பீடுகளை மேற்கோள் காட்டி இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த பருவமழை நிலைமையால் குறைந்தபட்சம் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர் நேரடியாக பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், உருவாகி வரும் இந்த அனர்த்த நிலைமையை எதிர்கொள்வதற்காக இலங்கை அரசோ அல்லது வேறு எந்தத் தரப்போ இதுவரை சர்வதேச உதவியை கோரவில்லை என்றும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
பிராந்திய காலநிலை கணிப்பு
தற்போதைய பருவகால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் பிராந்திய காலநிலை கணிப்புகளின்படி, இந்த ஆண்டின் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் நாட்டிற்கு வழக்கமான அளவுக்கு நெருக்கமான அல்லது அதைவிட சற்றுக் குறைவான மழைவீழ்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையின் அளவும் தீவிரமும் மாறுபடக்கூடும் என்பதால், வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த அபாயங்கள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |