"உதிரம் கொடுத்து உயிரை காப்போம்" -நவாலி இளைஞர்களின் முன் மாதிரியான செயற்பாடு
jaffna
youth
navaly
blood donation
By Sumithiran
"உதிரம் கொடுத்து உயிரை காப்போம்" எனும் தொனிப்பொருளில் சண்டிலிப்பாய் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட இரண்டாவது குருதித்தான முகாமானது இன்று (25/07/2021) நவாலி சென்பீற்றஸ் தேவாலயத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ்.மாவட்ட உதவிப்பணிப்பாளர் திருமதி.வினோதினி , வலி தென் மேற்கு, சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் லே.றஜீவன், சண்டிலிப்பாய் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரினோராச், பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் உறுப்பினர்கள், நவாலி சென்பீற்றஸ் இளைஞர் கழக உறுப்பினர்கள் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
இன்றைய முகாமில் 23 குருதி கொடையாளர்கள் குருதித்தானம் செய்திருந்தனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி