எதிர்க்கட்சி தலைவரின் உடலை கையளிப்பதற்கு தயங்கும் ரஷ்ய அதிகாரிகள்
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸே நவல்னி கடந்த 16ஆம் திகதி சிறையில் உயிரிழந்த நிலையில் உடலை அவரது தாயரிடம் கையளிப்பதற்கு ரஷ்ய அதிகாரிகள் மறுக்கின்றனர் என நவால்னியின் நெருங்கிய நண்பரொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னரே உடலை கையளிப்போம் என ரஷ்ய அதிகாரிகள் நவால்னியின் தயாரிடம் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலையில் நடந்துகொண்டிருந்த வேளை தீடிரென மயக்கமடைந்து வீழ்ந்து நவால்னி உயிரிழந்தார் என ரஷ்ய அதிகாரிகள் அவரின் தாயாரிடம் குறிப்பிட்டுள்ளனர்.
இறப்பிற்கான நோய் அறிகுறி
இந்த நிலையில் தீடீர் இறப்பிற்கான நோய் அறிகுறி காணப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் நவால்னியின் தாயாரிடம் தெரிவித்துள்ளனர். எனினும் இது ஒரு தெளிவற்ற பொதுவான விளக்கம் என குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் சிறைச்சாலைக்கு அருகில் உள்ள நகரமொன்றிற்கு நவால்னியின் உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தாயாருக்கு தெரிவித்தனர். எனினும் அவர் அங்கு சென்றவேளை பிரேத அறை மூடப்பட்டிருந்தது என நவால்னியின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
நண்பர்கள் வேண்டுகோள்
முதலாவது பிரேத பரிசோதனை முழுமையானதாக காணப்படாததால் மற்றுமொரு பிரேத பரிசோதனையை மேற்கொள்ளவேண்டியுள்ளது என ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனவே தடயங்களை மறைப்பதற்காக வேண்டுமென்றே நவால்னியின் உடலை அதிகாரிகள் மறைக்கின்றனர் என தெரிவித்துள்ள நவால்னியின் நண்பர்கள் அவரது உடலை உடனடியாக குடும்பத்தினரிடம் வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |