ரணிலுக்கு மோடி அனுப்பிய விசேட தகவல்..!
சிறிலங்காவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இலங்கையின் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி அந்த கடிதத்தில் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மக்களின் பரஸ்பர நலனுக்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்திருப்பதாக இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரதமரை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்
இதேவேளை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாத் துறையில் விரைவான முதலீடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதமை குறிப்பிடத்தக்கது.

