கனடாவை தொடர்ந்து நெதன்யாகுவை கைது செய்ய முண்டியடிக்கும் நாடுகள்
இஸ்ரேல் - காசா போரில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் கால் வைத்தால் கைது செய்யப்படுவார் என பல நாடுகளும் அறிவித்துள்ளமை இஸ்ரேலுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் காசாவை தாக்கத் தொடங்கிய இஸ்ரேல் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களை கொன்று குவித்துள்ளது.
அமெரிக்கா தலையீட்டால் இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம்
இது இனப்படுகொலை என பல நாடுகளும் கண்டித்தன. நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
தற்போது அமெரிக்கா தலையீட்டால் இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம் நடைமுறையாகியுள்ள நிலையிலும் நெதன்யாகு மீதான பிடியாணை நடைமுறையில் உள்ளது.
கனடாவை தொடர்ந்து மேலும் பல நாடுகள்
இதனால் பெஞ்சமின் நெதன்யாகு கனடாவிற்குள் நுழைந்தால் அவரை கைது செய்வோம் என கனடா பிரதமர் மார்க் கார்னி எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் பிரான்ஸ், துருக்கி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளும் பெஞ்சமின் நெதன்யாகு மீதான சர்வதேச பிடியாணையை செயல்படுத்துவோம் என கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
