நெதன்யாகு கொல்லப்பட்டாரா...! வெளியான காணொளியால் வெடித்த சர்ச்சை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அண்மையில் வெளியிட்ட காணொளி ஒன்றில், அவரது வலது கையில் ஆறு விரல்கள் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளமை சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 13 அன்று ஈரான் மீதான போர் குறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் காணொளி ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
குறித்த காணொளியை அவதானித்த பயனர்கள், அவர் கையை அசைக்கும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஆறு விரல்கள் தெரிவதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு
இதனைத் தொடர்ந்து, நெதன்யாகு ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாகவும் தற்போது வெளியாகும் காட்சிகள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலி காணொளிகள் எனவும் தெரிவித்து வருகின்றனர்.
அத்தோடு, இதனைச் சுட்டிக்காட்டி #WhereisBibi என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்ட் ஆகத் தொடங்கியுள்ளது.

இந்த வதந்திகள் குறித்து எக்ஸ் தளத்தின் க்ரோக் (Grok) ஏஐ விளக்கம் அளிக்கையில், நெதன்யாகு அந்தக் காணொளியில் ஐந்து விரல்களை மட்டுமே கொண்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளது.
அத்தோடு, ஒளிப்பதிவு செய்யப்பட்ட கோணம் மற்றும் கையின் வேகமான அசைவு காரணமாக ஏற்பட்ட ஒரு மாயத்தோற்றமே இதுவென்றும் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக இத்தகைய மாற்றங்கள் காணொளி பதிவாக்கத்தின்போது நிகழ வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட போதிலும், சமூக வலைத்தளங்களில் நிலவும் இந்தத் தீவிரமான சந்தேகங்கள் குறித்து அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இதுவரை எந்தவித அதிகாரபூர்வமான விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |