பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்த புதிய பாதுகாப்பு செயலாளர்
இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (Sampath Thuyacontha) பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்துள்ளார்.
பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நேற்று (02) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா (Shavendra Silva), இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே (Vikum Liyanage), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா (Priyantha Perera), விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச (R. A. U. P. Rajapaksa) ஆகியோர் பாதுகாப்புச் செயலாளரைத் தனித்தனியாகச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்புச் செயலர்
அதுமட்டுமல்லாமல், பாதுகாப்புச் செயலாளர், பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவையும் சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவு செய்யப்பட்டதையடுத்து புதிய பாதுகாப்புச் செயலர் பதவியேற்ற பிறகு சிரஷ்ட அதிகாரிகளை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இதேவேளை ஏழு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நேற்று (02) ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |