உக்ரைன் ஆயுதப் படைக்கு புதிய தலைவரை நியமித்த ஸெலன்ஸ்கி
உக்ரேனிய ஆயுதப்படைக்கு புதிய தலைவரை அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) நியமித்துள்ளார்.
உக்ரைனின் அனாடலி பார்ஹைலெவிச் என்பவர் கடந்த 2024ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் இந்த பதவியை வகித்து வந்த நிலையில், இந்த புதிய நியமனம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில் , “போர்த் திறனை மேம்படுத்தும் வகையில், ஆயுதப் படைகளை நாங்கள் திட்டமிட்ட முறையில் மாற்றியுள்ளோம்.
உக்ரேனிய ஆயுதப்படை
எனினும், அனாடலி பார்ஹைலெவிச் குழுவில் ஒருவராக தொடர்ந்து நீடிப்பதோடு இராணுவத்தின் நிலைப்பாடுகளை ஒட்டுமொத்த அளவில் மேற்பார்வை செய்வதுடன், இராணுவ ஒழுக்கம் வலுப்படும் வகையிலான பணிகளையும் கவனிப்பார்” என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை உக்ரைன் மீது ரஷ்யா முழுமையாக படையெடுப்பை தொடங்கியதிலிருந்து ,ஜனாதிபதி ஸெலன்ஸ்கி மற்றும் அரசு இராணுவத்தில் அடிக்கடி அதிகாரிகள் மட்டத்தில் மாற்றங்களைச் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்