வாகன எண் தகடுகளில் ஏழு புதிய பாதுகாப்பு அம்சங்கள்! அமைச்சர் வெளியிட்ட தகவல்
புதிய வாகன எண் தகடுகளில் ஏழு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என்றும், ஆறு அம்சங்கள் ஏற்கனவே மொரட்டுவ பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் பெற்றுள்ளன என்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஏழாவது அம்சத்தை அங்கீகரிக்க மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு வசதி இன்மையால் அதன் அங்கீகாரத்திற்கு சர்வதேச ஆய்வகத்தின் உதவியைப் பெற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொள்முதல் செயல்முறை
இதேவேளை, எண் தகடுகளை வழங்குவது தொடர்பான விவகாரம் கொள்முதல் செயல்முறையின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், மூன்று நிறுவனங்கள் டெண்டர்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
2000 ஆம் ஆண்டு முதல் கடந்த 25 ஆண்டுகளாக ஒரே நிறுவனம் எண் தகடுகளை வழங்கி வருவதாகவும், 2025 ஆம் ஆண்டில் அரசாங்கம் புதிய டெண்டர்களை அழைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாமத்திற்கு காரணம்
இந்த நிலையில், பாதுகாப்பு அம்சங்களை அங்கீகரிக்கும் செயல்முறை நீண்ட காலம் எடுப்பதாலும், இந்த விடயத்தை ஒரே நிறுவனம் நீண்ட காலமாகக் கையாள்வதால் ஏற்பட்ட சிக்கலான தன்மை செயல்முறையை தாமதப்படுத்தியதாலும் எண் தகடுகளை வழங்கும் செயல்முறை தாமதமாகி வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், எண் தகடுகள் கிடைக்காததால், செப்டம்பர் 30, 2025 வரை 165,512 வாகனங்களுக்கு எண் தகடுகள் வழங்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஐ.நாவிலிருந்து அரசுக்கு சவால் விடுத்த அர்ச்சுனா எம்.பி: இராணுவத்திற்கு எதிராக சர்வதேசத்தில் முறைப்பாடு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
