இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய ஓய்வூதிய முறை!
Government Employee
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Pakirathan
இலங்கையில், எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் கூறியுள்ளார்.
களுத்துறை பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்படி, பங்களிப்பு ஓய்வூதிய முறையையே அரசாங்கம் அறிமுகம் செய்யவுள்ளது.
புதிய ஓய்வூதிய முறை
குறித்த முறையை நடைமுறைப்படுத்திய உலகின் பல நாடுகள் வெற்றிகரமான பெறுபேறுகளைப் பெற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.