இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உந்துருளி! எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வாகும் என நம்பிக்கை
எரிபொருள் இல்லாது மனித வலு மற்றும் மின்சாரத்தில் இயங்க கூடிய உந்துருளி ஒன்று கண்டுபிடிக்கப்படுள்ளது.
இலங்கையை சேர்ந்த இயாஸ் பசூல் என்பவரே குறித்த உந்துருளியை வடிவமைத்தவராவர்.
எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு தீர்வு
இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து வாழ்வாதார பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .
இவற்றில் முக்கியமாக எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்றார்கள்.
இந்த எரிபொருள் பிரச்சினையில் இருந்து விடுபடும் வகையில் குறித்த உந்துருளி வடிவமைக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு வழிப் பாவனை
மின்சாரம் மற்றும் மனித வலுவில் இயங்க கூடிய குறித்த உந்துருளியை ஒரு முறை மின்னேற்றம் செய்தால் 60 km தூரம் வரை பயணிக்க முடியும்.
அத்தோடு மனித வலு மூலம் சாதாரன ஈருருளியாகவும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அனுமதிப்பத்திரம் அவசியமில்லை
இந்த உந்துருளியானது துவிச்சக்கரவண்டி வகைக்குள் அடக்குவதால் தலைகவசம், அனுமதி பத்திரம் எதுவும் அவசியமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு சிறப்பம்சமாக கையடக்க தொலைபேசிகள் மூலம் குறித்த உந்துருளியை செயற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.