நாட்டிற்கான புதிய ரக வாகன இறக்குமதி: வெளியான தகவல்
இலங்கை (Sri Lanka) பழைய வாகனங்களை நியாயமான விலையில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து புதிய ரக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை உலகளாவிய இலங்கை வணிக கூட்டமைப்பின் (GFSLBC) பொதுச் செயலாளர் சஜீவ் க்ஷத்ரிய ராஜபுத்ர தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதிக்கு தற்போது 300 சதவீத வரி விதிக்கப்படுவதுடன் உள்ளூர் மறுவிற்பனை சந்தை விலைகளை அசல் கொள்முதல் விலை மூன்று மடங்கால் அதிகரிக்கின்றது.
வாகன இறக்குமதி
எனவே, ஏற்றுமதியாளர்கள் தங்கள் அடுத்த வாகன இறக்குமதியின் வரியிலிருந்து, பழைய வாகன ஏற்றுமதி இலாபத் தொகையைக் கழிப்பதன் மூலம் தங்கள் இழப்புகளை மீட்கமுடியும் என்று ராஜபுத்ர விளக்கியுள்ளார்.
இலங்கை மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே பல வருட பயன்பாட்டிற்குப் பிறகும், வாங்கிய விலையை விட அதிக விலைக்கு வாகனங்களை விற்க முடிகின்றது.
இறுதியில், இந்த வாகனங்கள் பயன்படுத்த முடியாததாகி உலோகக் குவியல்களாக மாறும் இதன்போது, மக்கள் கொள்வனவு செய்த வாகனங்களின் மதிப்பு என்னவாகும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே,பழைய வாகனங்களை நியாயமான விலையில் ஏற்றுமதி செய்தால், அதில் கிடைக்கின்ற லாபம் புதிய வாகனங்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைக்க உதவும், இதனால் பழைய வாகனங்களை அகற்றி புதியவற்றைக் கொண்டு வர முடியும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 20 மணி நேரம் முன்
