இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகினார் நிமல் சிறிபால டி சில்வா
அமைச்சுப் பதவி இராஜினாமா
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து ஆகிய தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அமைச்சரவை அமைச்சர் ஒருவர் (Taisei) என்ற ஜப்பானிய நிறுவனத்திடம் லஞ்சம் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக அமைச்சர் அறிக்கையொன்றை வெளியிட்டார்.
இது தொடர்பில் அரச தலைவர் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
பொதுமக்கள் மத்தியில் ஊகங்கள்
சஜித் பிரேமதாச தம்மை வெளிப்படையாகப் பெயரிடவில்லை எனத் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இந்த விடயம் தனது அமைச்சுப் பதவிக்கு உட்பட்டது எனவும் தெரிவித்தார்.
இதனாலேயே லஞ்சம் கோரப்பட்டதாக பொதுமக்கள் மத்தியில் ஏற்கனவே ஊகங்கள் நிலவி வரும் நிலையில், தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பக்கச்சார்பற்ற விசாரணை
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பிய கடிதத்தில், குற்றச்சாட்டு தொடர்பில் விரிவான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதுவரையில் தான் தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாகவும் அமைச்சர் கோரியுள்ளார்.