இலங்கைக்கான வாகன இறக்குமதியில் வீழ்ச்சி ஏற்படவில்லை : வெளியான தகவல்
இலங்கைக்கான வாகன இறக்குமதிகள் எதிர்பார்த்த அளவுக்குக் கணிசமாகக் குறையவில்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வாகன இறக்குமதி மீது மேலதிக வரி விதிக்கப்பட்ட போதிலும் வாகன இறக்குமதியில் வீழ்ச்சி ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் தொடர்ந்தும் சந்தைக்குள் வந்தவண்ணமே உள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
தேங்கிக் கிடந்த வாகனங்கள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சந்தையில் பெருமளவிலான வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்த போதிலும், இறக்குமதியில் பெரிய வீழ்ச்சி ஏற்படவில்லை.

இதனால் ஏற்பட்டுள்ள சிறிய அளவிலான குறைப்பானது அரசாங்கத்தின் வருமானத்திற்கு எவ்வித நிதி ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
சுங்கத் திணைக்களத்திற்கு கிடைக்கும் ஒட்டுமொத்த வருமானத்தில் சுமார் 30 சதவீதமான பங்களிப்பு வாகன இறக்குமதி மூலமாகவே கிடைக்கப் பெறுகின்றது.
கடந்த ஆண்டும் வாகன இறக்குமதியானது சுங்க வருமானத்தில் 30 முதல் 35 சதவீதமான பங்களிப்பைக் கொண்டிருந்ததுடன், அதே போக்கு இந்த ஆண்டும் நீடிக்கின்றது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 22 மணி நேரம் முன்