வடக்கு சுமத்ரா தீவுகளில் நிலநடுக்கம்!

Tsunami Indonesia Earthquake World
By Kanooshiya Oct 25, 2025 11:12 AM GMT
Report

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளில் இன்று (25.10.2025) நண்பகல் சுமார் 5.2 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என மலேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் மியூலாபோவிலிருந்து வடகிழக்கே சுமார் 62 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து கொலை செய்யப்படவுள்ள தமிழர் : மிதிகம லசா மரணத்தில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

அடுத்து கொலை செய்யப்படவுள்ள தமிழர் : மிதிகம லசா மரணத்தில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

சுனாமி தயார்நிலை

இந்நிலையில் இலங்கையில் நாடு முழுவதினையும் உள்ளடக்கி நவம்பர் 5 ஆம் திகதி சுனாமி தயார்நிலைப் பயிற்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வு) தெரிவித்துள்ளார்.

வடக்கு சுமத்ரா தீவுகளில் நிலநடுக்கம்! | No Tsunami Threat From Quake In North Sumatra

முப்படையினர், காவல்துறையினர் அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் சுனாமி தயார்நிலைப் பயிற்சி குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றபோது இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த ஒரு மாதமாக சுமத்ரா தீவுக்கு அருகில் பல சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதானிக்கு 33000 கோடி ரூபாவை தாரைவார்த்த மோடி அரசாங்கம்! கசிந்த விசாரணை அறிக்கை

அதானிக்கு 33000 கோடி ரூபாவை தாரைவார்த்த மோடி அரசாங்கம்! கசிந்த விசாரணை அறிக்கை

சுனாமி ஏற்படும் அபாயம்

நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவிருக்கும் சுனாமி தயார்நிலைப் பயிற்சி, இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள 28 நாடுகளை உள்ளடக்கிய ஒரு பிராந்திய அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுனாமிக்கான தயாரிப்புகளின் முக்கிய பகுதியாக களுத்துறை, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய 4 மாவட்டங்களில் இந்த பயிற்சி நடத்தப்படும் என்றும், மற்ற மாவட்டங்களையும் உள்ளடக்கும் என்றும் மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சுமத்ரா தீவில் 6.5 ரிக்டர் அளவுகோலுக்கு மேல் நிலநடுக்கம் ஏற்பட்டால், நாட்டில் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளது என்றும், அதற்கு முன் தயாரிப்பு அவசியம் என்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் இயக்குநர் ஜெனரல் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்