அடுத்து கொலை செய்யப்படவுள்ள தமிழர் : மிதிகம லசா மரணத்தில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lanka Police Investigation Lasantha Wickramasekara
By Kanooshiya Oct 25, 2025 11:47 AM GMT
Report

சுட்டு படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர அல்லது 'மிதிகம லசா'வின் நெருங்கிய நண்பரான கணேஷ் அடுத்து கொலை செய்யப்படவுள்ளதாக புலனாய்வு பத்திரிகையாளர் சாலிய டி. ரணவக்க சர்வதேச புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி வெளிப்படுத்தியுள்ளார்.

யூடியூப் சனல் ஒன்றில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை தொடர்பில் நடந்த கலந்துரையாடலிலேயே அவர் இவ்விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பாதாள உலகக் குழு உறுப்பினர்களான “ஹரக் கட்டா“, “மிதிகம ருவான்”, லசந்த விக்ரமசேகர அல்லது 'மிதிகம லசா' ஆகியோர் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதோடு உறவினர்கள் எனவும் இதன்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலியெடுத்த விபத்துக்கள்

இந்த ஆண்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலியெடுத்த விபத்துக்கள்

சாரதியாக கணேஷ்

குறித்த விடயங்கள் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பத்திரிகையாளர், “கணேஷ் சாரதியாகவும் பணியாற்றி வந்துள்ளார். சன்சையின் சுந்தா என்பவரை தாக்கி சிறைக்கும் சென்றுள்ளார்.


ஹரக்கட்டா, மிதிகம ருவான், லசந்த விக்ரமசேகர ஆகியோர் இணைந்து மேற்கொண்ட போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பல குற்றச் செயல்களில் சேர்த்த சொத்துக்கள் மற்றும் பணம் முழுவதும் தமிழரான கணேஷ் வசமே காணப்பட்டுள்ளது.

ஹரக் கட்டா, மிதிகம ருவான் ஆகிய பாதாள குழுவே இணைந்து லசந்த விக்ரமசேகரவை வெலிகம பிரதேச சபைக்கு போட்டியிடவும் அவரை தலைவராக்கவும் பெரும் முயற்சியெடுத்துள்ளது.

'மிதிகம லசா' பிரதேச சபைத் தலைவரான பின்னர் இந்த குழுவினருடன் இருந்து ஒதுங்கியிருந்துள்ளார்.அண்மையில் லசந்த விக்ரமசேகர கணேஷூக்கு அவரின் பெயரில் ஹோட்டல் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், கணேஷிடம் இந்த பணம் இருப்பதால் கட்டாயம் அடுத்து இவர் கொல்லப்படுவார் என புலனாய்வு தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர அல்லது 'மிதிகம லசா' மாணிக்கக்கல் தோண்டும் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

யாழில் இளைஞன் மீது காவல்துறை துப்பாக்கிசூடு: உறவினர்கள் வெளியிட்ட தகவல்

யாழில் இளைஞன் மீது காவல்துறை துப்பாக்கிசூடு: உறவினர்கள் வெளியிட்ட தகவல்

கொலை செய்வதற்கான திட்டம்

கெக்குனதுரோ இந்திக்க என்பவருக்கு மிதிகம லசாவை கொலை செய்வதற்கான ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. அவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் மிதிகம ருவனின் நண்பர் எனவும் தெரியவந்துள்ளது.

அடுத்து கொலை செய்யப்படவுள்ள தமிழர் : மிதிகம லசா மரணத்தில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்! | Tamil Ganesh Is Next Murder

துப்பாக்கித்தாரிகள் அஹங்கம பகுதியில் இருந்து வந்து வெலிகம பிரதேச சபையை தாண்டி சென்று,பொல்லத்துமோதர பாலத்திற்கு அருகில் துப்பாக்கிகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.

குறித்த பகுதியில் சிசிரிவி கமராக்கள் இல்லை. துப்பாக்கிச் சூட்டிற்காக ரிவோல்வர் வகையான துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கித்தாரி நன்றாக பயிற்சி பெற்ற ஒருவர்.

இந்நிலையில், துப்பாக்கித்தாரியின் கை விரல்களில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்தன. எவரேனும், அவரின் கையை பிடித்தால் கைரேகை அடையாளம் தெரியாமல் இருப்பதற்காகவே இவ்வாறு கை விரல்களில் பிளாஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மிதிகம ருவனின் ஆயுதங்களை காட்டிக்கொடுத்தது மிதிகம லசா என்ற நம்பிக்கையில் குறித்த கொலையை மேற்கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

குண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது : குற்றவாளிகள் தலைவராகிவிட்டனர் : துணை அமைச்சர் வெளிப்படை

குண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது : குற்றவாளிகள் தலைவராகிவிட்டனர் : துணை அமைச்சர் வெளிப்படை

இந்திய தொலைபேசி அழைப்பு

இந்தியாவில் இருந்து லசந்தவின் மனைவிக்கு கடந்த 21 ஆம் திகதி வந்த தொலைபேசி அழைப்பில் 22 ஆம் திகதி லசந்தவை கொல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து கொலை செய்யப்படவுள்ள தமிழர் : மிதிகம லசா மரணத்தில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்! | Tamil Ganesh Is Next Murder

மனைவியும் அவரை எங்கும் போக வேண்டாம் என தெரிவித்திருந்த நிலையில், பின்னர் மனம் மாறிய அவர் கெப்வாகனத்தில் தனது சாரதியுடன் வழமையாக வரும் வழியை விடுத்து சபைக்கு சென்றுள்ளார்.

லசந்த விக்ரமசேகரவுக்கும் இந்தியாவில் இருந்து தொலைபெசி அழைப்புகள் வந்துள்ள நிலையில் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

மாதத்திற்கு மூன்றரை லட்சம்! பக்கோ சமனின் விசாரணையில் சிக்கிய அரச அதிகாரி

மாதத்திற்கு மூன்றரை லட்சம்! பக்கோ சமனின் விசாரணையில் சிக்கிய அரச அதிகாரி

சுட்டுக்கொல்லப்பட்ட லசந்த விக்ரமசேகரவின் பாதுகாப்பு கோரிய கடிதம் : காவல்துறையின் அறிக்கை

சுட்டுக்கொல்லப்பட்ட லசந்த விக்ரமசேகரவின் பாதுகாப்பு கோரிய கடிதம் : காவல்துறையின் அறிக்கை


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021