எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இது குறித்து இன்றைய (10.04.2026) நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கப்படவுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணை
இந்தத் தீர்மானம், கடந்த மார்ச் 19 ஆம் திகதியன்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

புத்தளம் - நுரைச்சோலையில் உள்ள லக்விஜய (Norochcholai Lakvijaya) நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான மற்றும் தரமான நிலக்கரியைக் கொள்முதல் செய்வதை உறுதிசெய்யும் தனது முதன்மைக் கடமையை எரிசக்தி அமைச்சர் நிறைவேற்றத் தவறிவிட்டார் எனவும் நாட்டின் தரமற்ற நிலக்கரி இறக்குமதியில் 100 பில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இத்தகைய பெரும் அலட்சியம், அமைச்சரின் பொறுப்பின் அடிப்படை மீறலாகும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது.
மேலும், இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் மேலாளராகப் பணியாற்றியபோது ஊழல் செய்ததற்காக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC), கொழும்பு உயர் நீதிமன்றத்தில், இலஞ்சச் சட்டத்தின் 70 ஆவது பிரிவின் கீழ் எரிசக்தி அமைச்சர் மீது முறைப்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் அந்தத் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.
இதன் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |