நோர்வூட் பிரதேசசபைத் தலைவருக்கு கொரோனா! காலவரையறையின்றி மூடப்பட்டது பிரதேச சபை
corona
people
dikoya
By Shalini
நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் ரவி குழந்தைவேல் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல் ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாக நோர்வூட் பிரதேச சபைத் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த 13ம் திகதி மாதாந்த சபை அமர்வு இடம் பெற்றமையினால் சபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் பி.சீ.ஆர்.பரீசோதனை மேற்கொள்ளவிருப்பதகவும் பிரதேசசபை காலவரையறையின்றி முடப்படஉள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்