கியூ.ஆர் முறைமையை நீக்க தீர்மானிக்கவில்லை - அதிகரிக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு : கஞ்சன!
Minister of Energy and Power
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
By Pakirathan
எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் நடைமுறையில் உள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையை நீக்குவது தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியிருந்தது.
இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதனை தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தின் ஊடாக அவர் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு!
மேலும் அவர்,
"தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டின் அளவை படிப்படியாக அதிகரிக்க தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.
அடுத்த சில மாதங்களில் நிதி அமைச்சு மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து இதற்கான முடிவினை எடுப்போம்." இவ்வாறு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி