ரணிலே பொருத்தமான தலைவர், எந்த தேர்தலையும் சந்திக்க தயார் - பசிலின் பகிரங்க அறிவிப்பு
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும், அவரை அதிபராக நியமிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சரியானதே எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று (05) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன ஊடக நிலையம் திறந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு இன்று நெலும் மாவத்தை சிறிலங்காபொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
எந்தத் தேர்தலையும் சந்திக்கத் தயார்
குறித்த நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தலைமையில் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் குழுவும் கலந்துகொண்டுள்ளனர்.
குறித்த ஊடக சந்திப்பில் கட்சியின் எதிர்கால போக்குகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து பதிலளித்த பசில்,
பத்திரிகை ஊடகங்களில் எப்படி எழுதினாலும் பரவாயில்லை நாங்கள் எந்த தேர்தலையும் சந்திக்க தயாராக உள்ளோம்.
பொருத்தமான அதிபர்
நான் அரசாங்கத்தில் இல்லை. இப்போது எமது அரசாங்கம் 21வது திருத்தத்தின் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளது. நான் அரசாங்கத்தில் இல்லை என்றாலும் அரசியலில் இருக்கிறேன்
மக்கள் 69 இலட்சம் வாக்களித்து கோட்டாபயவை அதிபராக்கினார்கள். ஆனால் அவர் பதவி விலகினார். அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் அதிபரை தெரிவு செய்தோம். அதற்கு பொருத்தமான நபரை தெரிவு செய்ய அப்போது தீர்மானித்தோம்.
அந்த தெரிவு சரியானது என நான் கருதுகின்றேன். ஏனெனில் கட்சிகளை சேர்ந்த அனைவரும் எதிர்க்கட்சிகள் சுதந்திரமாக அரசியல் செய்ய அனுமதிக்க வேண்டும்.
ஜி.எல்.பீரிஸ் தலைமையில்
அரசியல் செய்வதற்கும் தெருவில் இறங்குவதற்கும் எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பொருளாதாரம் மற்றும் பிற பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஜி.எல். பீரிஸ் தற்போது உத்தியோகபூர்வமாக அங்கு எங்கள் கட்சி தலைமையில் இருக்கிறார்.
எதற்கும் பயப்பட வேண்டாம் என்பதுதான் எங்கள் கட்சியின் முழக்கம். இப்போது ஒவ்வொருவரும் கட்சி தொடர்பாக வித்தியாசமாக சிந்திக்கிறார்கள்" என தெரிவித்திருந்தார்.