பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கவுள்ளவர்களுக்கு வெளியான அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க உள்ளவர்கள் பிரதேச செயலகங்களுக்குத் தகவல் தெரிவித்து, அவர்கள் மூலம் நன்கொடைகளை விநியோகிக்க வாய்ப்பளிக்குமாறு கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரசன்ன கினிகே கேட்டுக்கொண்டுள்ளார்.
நன்கொடையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தனது பொறுப்பு என்பதாலும், நேரடியாக உதவிகளை வழங்கும்போது ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாலும், நன்கொடையாளர்களுக்கு இவ்வாறு தெரிவிப்பதாக அவர் மேலும் கூறினார்.
கொழும்பு மாவட்ட பாதிப்பு
கொழும்பு மாவட்டத்தில் தற்போது 397 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 63,047 குடும்பங்களைச் சேர்ந்த 246,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.. அனர்த்தம் காரணமாக மூன்று பேர் இறந்துள்ளதாகவும், மேலும் இரண்டு பேர் காணாமல் போயுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

6 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், மேலும் 1,187 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், கிட்டத்தட்ட 20,000 பேர் தற்போது தங்குமிடங்களில் இருப்பதாகவும் பிரசன்ன கினிகே மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |