200 உள்ளூராட்சி நிறுவனங்களை தன்வசமாக்கிய திசைக்காட்டி
தேசிய மக்கள் சக்தி தற்போது 200 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
தனமல்வில பிரதேச சபை மற்றும் பலாங்கொடை நகர சபையை கையகப்படுத்தியதன் மூலம், நேரடியாக கையகப்படுத்தப்பட்ட 151 நிறுவனங்கள் உட்பட 200 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கொண்டுள்ளது.
அதன்படி, இன்று (24) ஐக்கிய மக்கள் சக்தியால் கையகப்படுத்தப்பட்ட கம்பளை நகர சபை மற்றும் பெந்தோட்டை பிரதேச சபையுடன், அவர்கள் வைத்திருக்கும் மொத்த உள்ளூராட்சி நிறுவனங்களின் எண்ணிக்கை 27 ஆகும்.
தமிழரசுக் கட்சி
இலங்கை தமிழரசுக் கட்சி 17 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
இதே நேரத்தில், சிறிலங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை தலா 3 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தைப் பெற்றுள்ளன.
அத்துடன், இலங்கை பொதுஜன ஐக்கிய முன்னணி ஒரு உள்ளூராட்சி நிறுவனத்தின் அதிகாரத்தைப் பெற்றுள்ளதுடன் ஐக்கிய தேசியக் கட்சியால் எந்த நிறுவனத்தின் அதிகாரத்தையும் பெற முடியவில்லை.
இதற்கிடையில், சுயேச்சைக் குழுக்கள் உட்பட பல கட்சிகள் 12 உள்ளூராட்சி நிறுவனங்களல் அதிகாரத்தைப் பெற்றுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
