முடங்கியது மூன்றாம் உலகப் போருக்கான பாதை: நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த இருதரப்பு போர்நிறுத்தத் திட்டத்தை ஏற்க இஸ்ரேல் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
அத்துடன், இடைநிறுத்த ஒப்பந்தம் மீறப்படும் பட்சத்தில், இஸ்ரேல் கடுமையான பதிலடி நடவடிக்கையை எடுக்கத் தயார் எனவும் எச்சரித்துள்ளது.
Operation Rising Lion
இதன்படி, இஸ்ரரேல் பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர், ஐ.டி.எஃப். படையின் தலைவர் மற்றும் மொசாட் அமைப்பின் தலைவருடன் கூட்டமாகக் கலந்துரையாடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்போது, “Operation Rising Lion” என்ற இராணுவ நடவடிக்கையில் ஈரானுக்கு எதிரான அனைத்து முக்கியக் குறிக்கோள்களும் முழுமையாக அடைந்துள்ளதாகவும் அதை மீறியும் வெற்றி பெற்றுள்ளதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதத்துறையும், ஏவுகணைத் துறையும் இஸ்ரேல் வெற்றிகரமாக நீக்கியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரான் வான்வழி
இதேவேளை, இஸ்ரேல் விமானப்படை தெஹ்ரான் நகரின் வான்வழியை முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஈரானின் இராணுவத் தலைமையகம் மற்றும் அரசின் முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, டசின் கணக்கான முக்கிய இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், இன்னும் ஒரு முக்கிய அணுஅறிவியலாளர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
