பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 275 பேர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் சந்திர எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சந்தேகநபர்களும் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது 275 பேர் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசதலைவரின் பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மஹர சிறைச்சாலையில் 20 கைதிகளும் கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகளும் வெலிக்கடை சிறைச்சாலையில் 17 கைதிகளும் களுத்துறை சிறைச்சாலையில் 13 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.
போகாம்பறை மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலைகளிலிருந்து தலா 11 கைதிகளும் வாரியபொல சிறைச்சாலையிலிருந்து 10 கைதிகளும் அரசதலைவரின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனிடையே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரச தலைவர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.