ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலைக்கு விஜயம் செய்த இந்திய தூதரக தலைமை அதிகாரி
முல்லைத்தீவு (Mullaitivu) - ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலைக்கு இந்திய தூதரக தலைமை அதிகாரி ராம் மகேஷ் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயத்தை இந்திய (India) தூதரக தலைமை அதிகாரி நேற்று (11) மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில், நீண்டகாலமாக இயங்காத நிலையில் காணப்படும் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையினை விரைவாக மீள இயங்கச்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியத் தூதரக தலைமை அதிகாரியிடம் மக்கள் வலியுறுத்தியிருந்தனர்.
வேலைவாய்ப்பு
மேலும், குறித்த ஓட்டுத்தொழிற்சாலையினை மீள இயங்கச் செய்வதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடியதாக இருக்குமெனவும் இதன்போது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த கண்காணிப்பு விஜயத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.எம்.எம் பாரிஸ் கலந்து கொண்டிருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26