ஒடிசா தொடருந்து விபத்து - ரஷ்ய அதிபர் இரங்கல்
ஒடிசா தொடருந்து விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது என ரஷ்ய அதிபர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் இன்று நடந்த பயங்கர தொடருந்து விபத்து சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பாலசோர் மாவட்டத்தில் இன்று பெங்களூர், சென்னை தொடருந்து உட்பட 3 தொடரூந்துகள் அடுத்தடுத்து ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும்
இந்த விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தற்போது மீட்பு பணியில் தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இரங்கல் செய்தி
இந்நிலையில், ஒடிசா தொடருந்து விபத்து குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த இரங்கல் செய்தியில், "இந்தியா, ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள தொடருந்து விபத்து எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.
Russian President Vladimir Putin sent his condolences to President of India Droupadi Murmu and Prime Minister Narendra Modi over the deadly train collision in the Indian state of Odisha: Russian Embassy in India
— ANI (@ANI) June 3, 2023
“We share the grief of those who lost their loved ones in this… pic.twitter.com/mz2EX9HRF5
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணம்பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்." என தெரிவித்துள்ளார்.
