ஹோரர்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் சிக்கி சிதறியது எண்ணெய் கப்பல்
ஈரான் நிர்ணயித்த வழித்தடத்திலிருந்து விலகிச் சென்றபோது, ஹோரர்முஸ் நீரிணையில் விதைக்கப்பட்டிருந்த கடற்படை கண்ணிவெடியில் மோதியதால் எண்ணெய் கப்பல் ஒன்று வெடித்ததாக ஈரானிய ஊடகங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டன.
அரசு சாரா மெஹர் செய்தி நிறுவனத்தின்படி, அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியில் கண்ணிவெடியில் மோதுவதற்கு முன்பு, ஈரான் நிர்ணயித்த வழித்தடத்திலிருந்து அந்த எண்ணெய் கப்பல் விலகிச் சென்றதாக, நம்பகமான ஒரு வட்டாரம் டெஃபாபிரஸ் செய்தி இணையதளத்திடம் தெரிவித்துள்ளது.
தெஹ்ரான் நிர்ணயித்த வழித்தடங்கள் மூலம் மட்டுமே அனுமதி
உயிரிழப்புகள், கப்பலின் அடையாளம் அல்லது சேதத்தின் அளவு குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

ஜூன் 26 அன்று, ஹோரர்முஸ் நீரிணை வழியாகச் செல்வது தெஹ்ரான் நிர்ணயித்த வழித்தடங்கள் மூலம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று ஈரான் எச்சரித்தது.
வோஷிங்டன், ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தடையற்ற போக்குவரத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தெஹ்ரான் தனது கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு கால்வாய் வழியாக, ஈரானால் நிர்வகிக்கப்படும் வழிசெலுத்தல் பொறிமுறையின் கீழ் கப்பல்கள் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |