மட்டக்களப்பில் சோகம் - 58 வயது நபர் பலி
மட்டக்களப்பு பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொக்கடிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் நேற்று சனிக்கிழமை (11.04.2026) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் கொக்கடிச்சோலை - தாந்தாமலை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதற்கட்ட விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனது விவசாயச் செய்கைக்கு நீர் பாய்ச்சுவதற்காக, மின்சார நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரத்தை பொருத்த முயன்ற போதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கொக்கடிச்சோலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |