மரணத்தில் முடிந்த விருந்து : கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!
Sri Lanka Police
Anuradhapura
Sri Lanka Police Investigation
By Sathangani
அநுராதபுரம் - கெகிராவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதல் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தில் கொட்டல்பத்த பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
உயிரிழந்தவரின் வீட்டில் இடம்பெற்ற விருந்தொன்றின் போது, அயல் வீட்டைச் சேர்ந்த நபருடன் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, அயல் வீட்டைச் சேர்ந்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இந்தக்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சந்தேகநபரை கைது செய்வதற்காக கெகிராவை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி