நாடாளுமன்றில் விவாதத்திற்கு வருகிறது சர்ச்சைக்குரிய நிகழ்நிலை சட்டமூலம்
Parliament of Sri Lanka
Tiran Alles
By Jaso
பலரது எதிர்ப்புகளுக்கும் சர்ச்சைக்கும் வழிவகுத்துள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் நாளை (23) மற்றும் நாளை மறுதினம் (24) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட உள்ளது.
இதன்படி நாளை மறுதினம் (24) பிற்பகல் சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்த சட்டமூலத்திற்கு பெரும்பாலும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
சட்டமூலத்தை சமர்ப்பித்த திரான் அலஸ்
இந்த சட்டமூலம் பரிசீலிக்கப்படும் போது அதில் பல திருத்தங்கள் உள்ளடக்கப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் அண்மையில் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காக சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்