காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்: மீட்கப்பட்டதோ 200 டொலர்
நிதி அமைச்சகத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட இணையவழிப் பாதுகாப்பு மீறலைத் தொடர்ந்து, மோசடிக்காரர்களுக்கு மாற்றப்பட்ட காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 200 அமெரிக்க டொலரை மட்டுமே இலங்கை அதிகாரிகள் மீட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு ஊடகமொன்றின் தகவலின்படி, திறைசேரியிலிருந்து வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் காணாமல் போன நிதியைக் கண்டறிய, இலங்கை அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளிடம் உதவி கோரியிருந்தனர்.
அமெரிக்க வங்கிக் கணக்குகளில் பணம்
பணத்தின் ஒரு பகுதி அமெரிக்காவின் டெலாவேரில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிலும், மற்றொரு பகுதி வேறு ஒரு மாநிலத்தில் உள்ள வங்கியிலும் கண்டறியப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

. இருப்பினும், டெலாவேர் கணக்கு காலியாக இருந்ததாகவும், இரண்டாவது கணக்கில் 200 அமெரிக்க டொலர் மட்டுமே இருந்ததாகவும் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட தொகை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |