அதிகாரிகளுக்கு ரணில் பிறப்பித்த உடனடி உத்தரவு
எரிபொருட்களை பதுக்குபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
எரிபொருட்களை பதுக்குபவர்களுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வரிசைகளில் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்து அதனை வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் சோதனைகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட குழுக்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
எரிபொருள் நெருக்கடி மற்றும் அது தொடர்பில் இனிவரும் காலங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன்போதே குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்தல்
மேலும்,நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
மீன்பிடி, சுற்றுலா மற்றும் விவசாயத் துறைகளுக்கு போக்குவரத்து சபை டிப்போக்கள் மற்றும் இராணுவ முகாம்களில் இருந்து எரிபொருளை விநியோகிக்குமாறு அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
பாடசாலை சேவைக்கான எரிபொருள் வழங்கல்
இதேவேளை, இன்று பிற்பகல் 3 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து போக்குவரத்து சபை டிப்போக்களில் இருந்தும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வான்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவொன்றை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திங்கள் முதல் மீள ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்! போக்குவரத்து அமைச்சருக்கு ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள பணிப்புரை |

