கனடாவில் சோகத்தை ஏற்படுத்திய இலங்கைத் தமிழரின் மறைவு - அரைக்கம்பத்தில் பறக்கின்றன கொடிகள்..!!
சோகத்தை ஏற்படுத்திய இலங்கைத் தமிழரின் மறைவு
கனடாவில் இலங்கைத் தமிழரான காவல்துறை அதிகாரி விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், ஒட்டாவா காவல்நிலையத்தில் அரைக்கம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்களில் விபத்தில் காவல்துறை அதிகாரியாக கடமையாற்றிய இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஒட்டாவா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விஜயாலயன் மதியழகன்
இலங்கையில் பிறந்து ஒட்டாவாவில் வளர்ந்த, 28 வயதான விஜயாலயன் மதியழகன் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர் கனேடிய இராணுவத்தில் பல வருடங்கள் பணியாற்றிய நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் காவல்துறை சேவையில் இணைந்துகொண்டுள்ளார்.
விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு
With great sadness, we share that one of our members passed away last evening after a single-vehicle collision. The incident occurred off duty. (1/2)
— Ottawa Police (@OttawaPolice) June 15, 2022
"எங்கள் உறுப்பினர்களில் ஒருவர் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்பதை நாங்கள் மிகவும் சோகத்துடன், பகிர்ந்து கொள்கிறோம்" என்று ஒட்டாவா காவல்துறை டுவிட் செய்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த விபத்து அவர் கடமையில் இல்லாதபோது நிகழ்ந்ததாக ஒட்டாவா காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இவரது மறைவு காரணமாக அனைத்து ஒட்டாவா காவல்துறை கட்டிடங்களிலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பில் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

