நாமல் என்ற காயுடன் ஒக்ஸ்போர்ட் செஸ் ஆட்டம்! பரபரப்பு செக்மேற் ரூ இறுதிமுடிவு!
யோக்கியன் வாறான் செம்பை ஒளித்துவை என்ற கதையை நினைவுபடுத்தி சிறிலங்காவின் ராஜபக்ச அதிகார மையத்தின் அரசியல் பேபி நாமல் பிரித்தானிய சீமையில் அடிவாங்கியுள்ளார்.
பிரித்தானியாவில் மட்டுமல்ல உலகின் கல்வித்தளத்தில் முக்கிய மையங்களாக உள்ள கேம்பிரிட்ஜ் மற்றும் ஒக்ஸ்போர்ட் அரங்கங்களில் தமது அரசியல்வாரிசை உரையாற்ற வைத்து தெற்காசியாவின் முக்கிய அரசியல் நம்பிக்கை நட்சத்திர தலைவர் நாமல் ராஜபக்ச உரை பாரீர்! என காட்டமுனைந்த நகர்வுகளுக்குரிய அனைத்து (ராஜ) தந்திரங்களும் தோற்றதால்; ராஜபக்சக்கள தற்போது அதிர்ந்துள்ளனர்.
2010 நாமலின் தந்தையான அப்போதைய ஜனாதிபதி மகிந்தவுக்கு இதே ஒக்ஸ்போர்ட்டில் எப்படி கசப்பும் சகுனப்பிழையும் கிட்டியதோ இப்போது அதே சுவை மகனுக்கு கிட்டியுள்ளது.
ஈழத்தமிழர்கள் மீதான முள்ளிவாய்கால் கொடுமை இடம்பெற்ற மறுவருடமான 2010 டிசம்பரில் ஒக்ஸ்போர்ட் யூனியன் எனப்படும்; விவாத சங்கத்தில் உரையாற்றி தமிழர்கள் மீதான கொடுமைகளை நியாயப்படுத்த முனைந்த மகிந்த முயற்சி இறுதியில் எவ்வாறு மண்கவ்வியதோ அவ்வாறே ஜனநாயக முகமூடி போட்டுவந்த ஊழல் குற்றச்சாட்டு படிமம் கொண் நாமலின முயற்சியும் இறுதியில் மண்கவ்வியது.
ஆனால் 2010 போலில்லாமல் இந்த முறை ஒக்ஸ்போட் விவாதசங்கம் நாமலின் உரையை எப்படியாவது நடத்திவிடவேண்டும் என்ற நகர்வுகளில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தமை இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்ற டயஸ்போரா தமிழர்களுக்கும் ஒரு செய்தியாகும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது இன்றைய செய்திவீச்சு..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |