இலங்கைக்கு கடத்தவிருந்த பல இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

Sri Lanka India trichy
By Sathangani Jul 27, 2024 09:24 AM GMT
Report

இலங்கைக்கு (Sri Lanka) கடத்துவதற்காக ராமநாதபுரம் அடுத்த மானாங்குடி கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 இலட்சத்து 70 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி (Trichy) சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையின் போது (26) குறித்த மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுவேளை குறித்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் தலைமறைவான சந்தேக நபர் ஒருவரையும் தீவிரமாக தேடி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொட்டுக் கட்சியின் இறுதித் தீர்மானம் மகிந்தவின் கையில்..

மொட்டுக் கட்சியின் இறுதித் தீர்மானம் மகிந்தவின் கையில்..

வலி நிவாரணி மாத்திரைகள்

திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் குழு புது மடத்திலிருந்து மானாங்குடி வரை உள்ள கடற்கரை பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

இலங்கைக்கு கடத்தவிருந்த பல இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்! | Painkillers To Be Smuggled From India To Sri Lanka

அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 பெட்டிகள் கைப்பற்றப்பட்ட நிலையில் அதை திறந்து சோதனை செய்த போது அதில் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தமை தெரியவந்தது.

அவற்றை மண்டபம் சுங்கத் துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து ஆய்வு செய்தபோது ஒரு பெட்டியில் 57 ஆயிரம் மாத்திரைகள் வீதம் 10 பெட்டியில் 5 இலட்சத்து 70 ஆயிரம் மாத்திரைகள் இருந்தன.

வடக்கில் உள்ள பட்டதாரிகளுக்கு ஆளுநர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

வடக்கில் உள்ள பட்டதாரிகளுக்கு ஆளுநர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

3 கோடி சர்வதேச மதிப்பு 

இந்த வலி நிவாரணி மாத்திரைகளின் மதிப்பு சுமார் 1 கோடி 80 இலட்சம் என்றும் சர்வதேச மதிப்பு 3 கோடி ரூபாய் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கைக்கு கடத்தவிருந்த பல இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்! | Painkillers To Be Smuggled From India To Sri Lanka

இதனையடுத்து வலி நிவாரணி மாத்திரைகள் அடங்கிய பெட்டிகளை சரக்கு வாகனம் மூலமாக ராமநாதபுரம் சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு எடுத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் குறித்த வலி நிவாரணி மாத்திரைகள் நேற்று இரவு படகு மூலம் இலங்கைக்கு  கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் தேசிய வீரர்களின் 41ஆம் ஆண்டு நினைவு தினம்

வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் தேசிய வீரர்களின் 41ஆம் ஆண்டு நினைவு தினம்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025