2.6 பில்லியன் ஒப்பந்தம்: பாகிஸ்தான்-ரஷ்யா இடையே வெடிக்கும் சர்ச்சை
பாகிஸ்தான் (Pakistan) ரஷ்யாவுடன் (Russia) ஒரு பாரிய பொருளாதார ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2.6 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ், கராச்சியில் ஒரு நவீன எஃகு தொழிற்சாலை கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1970 களில் சோவியத் ஒன்றியத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட Pakistan Steel Mills (PSM), 2015 ஆம் ஆண்டு மூடப்பட்டது.
நம்பகமான ஆதாரங்கள்
தற்போது ரஷ்யாவின் நவீன எஃகு உற்பத்தி தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதனை மீண்டும் இயங்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இத்தகவல்கள் எதுவும் உண்மையல்ல வெறும் வதந்திகள் எனவும் இந்தியாவுடன் (India) ரஷ்யாவின் அதன் உறவை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டது எனவும் ரஷ்ய தரப்பு தெரிவிக்கின்றது.
ரஷ்யாவும் மற்றும் பாகிஸ்தானும் 2.6 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக வெளியான செய்திகளில் நம்பகமான ஆதாரங்கள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
