இந்தியாவிலிருந்து வெளியேற பாகிஸ்தான் அதிகாரிக்கு 24 மணிநேர காலக்கெடு
Delhi
Pakistan
India
By Sumithiran
இந்திய தலைநகர் புதுடில்லியில் அமைந்துள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தில் பணியாற்றும் அந்நாட்டின் அதிகாரி ஒருவருக்கு 24 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அதிகாரி இந்தியாவில் தனது அதிகாரபூர்வ அந்தஸ்துக்கு பொருத்தமற்ற செயல்களில் ஈடுபட்ட நிலையில் இந்திய அரசாங்கம் அவரை சட்டவிரோத நபராக பிரகடனப்படுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம்,வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தின் அலுவலகத்திற்கு உத்தரவு
மேலும், இன்று (மே 13) இது தொடர்பாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தின் பொறுப்பு அலுவலகத்திற்கு உத்தரவு ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி