சுற்றுலா பயணி போல வெளிநாட்டிலிருந்து வந்த பெண் கட்டுநாயக்காவில் கைது
அபுதாபி(Abu Dhabi)யில் இருந்து இன்று காலை வந்த பாகிஸ்தானிய(pakistan) பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
57 வயதுடைய குறித்த பெண் சுற்றுலாப் பயணி என்ற பெயரில் நாட்டிற்கு வந்துள்ளார்.
இவர் 02.450 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முற்பட்ட நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி
குறித்த ஹெரோயின் போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 73.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக இருக்கும் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பெண் கொண்டுவந்த பையின் பொய்யான அடிப்பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம்
மேலதிக நடவடிக்கைக்காக விமான நிலையத்தில் உள்ள காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |