நோயாளி மரணம்! சிகிச்சையளித்த வைத்தியர் மீது தாக்குதல்
Sri Lanka Police
Badulla
Sri Lanka
By Kiruththikan
பதுளை பொது வைத்தியசாலையில் 15 ஆம் இலக்க நோயாளர் விடுதியில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர் ஒருவரின் உறவினர்களால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
71 வயதான நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமையை அடுத்து, அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டது.
காவல்துறையினால் கைது
சம்பவத்துடன் தொடர்புடையதாக 3 பேர் பதுளை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், வைத்தியரை தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதுளை வைத்தியசாலையின் வைத்தியர்கள் தற்சமயம் வைத்தியசாலை வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்