திடீரென நடு வீதியில் அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தேரர்!
sri lanka
people
payagala
By Shalini
பயாகல, ஏதகம, ஸ்ரீ விஜயராமய விகாரையில் ஆண்டு தோறும் நடைபெறும் பெரஹெராவை, கொரோனா தொற்று காரணமாக இவ்வாண்டு நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையின் இந்த அறிவிப்பு காரணமாக தலைமை பதவியில் இருந்த வென். மஸ்தென்னே குணாலங்கார தேரர் வீதியின் நடுவில் அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இப்பகுதியில் கொரோனா ஆபத்து இருப்பதால் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு அளித்த அறிவுறுத்தல்களின்படி பெரஹெராவை நிறுத்த களுத்துறை நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் மற்றும் பயாகல பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
குறித்த விகாரையில் பெரஹெரா நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த தடை உத்தரவு வந்துள்ளது.
மேலும், குறித்த பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட குழு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.