தண்டனைச் சட்டக் கோவையின் திருத்தச் சட்டமூலத்திற்கு கிடைத்தது அனுமதி
தண்டனைச் சட்டக் கோவையின் திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இதனைக் குறிப்பிட்டார்.
உடலியல் தண்டனை மூலம் பிள்ளைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் உள துன்புறுத்தல் அதிகரித்திருப்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அனுமதி
எனவே எந்தவொரு துறையிலும் உடல் தண்டனை மூலம் துன்புறுத்தலுக்கு உள்ளாவதனை தடை செய்தல் மற்றும் உடல் துன்புறுத்தலுக்காகத் தண்டனை விதிப்பதற்கான ஏற்பாடுகளை விதிப்பதற்காகத் தண்டனைச் சட்டக் கோவையைத் திருத்தம் செய்வதற்குக் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
அதற்கமைய, ஏற்புடைய பணிகளுக்கு சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட தண்டனைச் சட்டக் கோவையின் திருத்தச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும், அதற்கமைய செயற்பட முடியவில்லை.
குறித்த சட்டமூலத்தை துரிதமாக வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
