மகிந்தானந்த அளுத்கமகே கைதை பட்டாசு கொளுத்தி கொண்டாடிய மக்கள் (காணொளி)
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு (Mahindananda Aluthgamage) 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை நாவலப்பிட்டி (Nawalapitiya) மக்கள் வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.
அதற்கமைய, குறித்த வழக்கு இன்று (29.05.2025) மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை நாவலபிட்டி மக்கள் வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.
மகிந்தானந்த, தனது பிறப்பிடமான நாவலப்பிட்டி தொகுதியில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
