நிலையான மாத வருமானம் பெறாத விவசாயிகளுக்கு 42 அமெரிக்க டொலர்கள் வழங்க திட்டம்..!
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் 41,500 ரூபாவுக்கு மேல் நிலையான மாத வருமானம் பெறாத சுமார் 53,000 விவசாயிகளுக்கு 42 அமெரிக்க டொலர்கள் அல்லது 15,000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ், வரும் ஒரு பருவத்தில் விவசாயம் செய்யப்படும் நிலத்தின் அளவுக்கேற்ப அனைத்து விவசாயிகளுக்கும் 36,000 தொன் டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் அல்லது மண் உரத்தை இலவசமாக விநியோகிக்க USAID திட்டமிட்டுள்ளது.
நாட்டின் மக்கள் தொகையில் 76% பேர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும், உணவுப் பொருட்களை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
உணவுப் பாதுகாப்பு அறிக்கை
இலங்கையின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான தனது சமீபத்திய அறிக்கையை வெளியிட்ட உலக உணவுத் திட்டம், 73% மக்கள் விலை மற்றும் ஊட்டச்சத்து குறைந்த உணவை உட்கொள்வதாகக் கூறியுள்ளது.
52% பேர் உணவின் அளவைக் குறைத்துள்ளதாகவும், 40% மக்கள் உணவின் அளவைக் குறைக்க விரும்புவதாகவும் அறிக்கை கூறுகிறது.
அதன்படி, உணவுப் பாதுகாப்பின்மை பெரும்பாலும் தென் மாகாணத்தை பாதித்துள்ளது, அங்கு மக்கள் தொகையில் 48% உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்
சப்ரகமுவ மாகாணத்தில் 45%, ஊவா மாகாணத்தில் 43% உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதே சதவீதம் மத்திய மாகாணத்தில் 36% ஆக உள்ளது.
மேலும், வட மத்திய மாகாணத்தில் 35%, மேல் மாகாணத்தில் 33% மற்றும் வடமேல் மாகாணத்தில் 31% மக்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக உணவுத் திட்டத்தின் படி, உணவுப் பாதுகாப்பின்மை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மிகக் குறைவாகப் பாதித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் சனத்தொகையில் 26% பேரும் வடமாகாணத்தின் 25% மக்களும் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை காட்டுகிறது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
