இலங்கையின் நிலை மோசம் - வெளிநாடு பறக்கத் தயாராகும் மக்கள்
கடவுச்சீட்டு பெற முண்டியடிக்கும் மக்கள்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனையடுத்து கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான நாளாந்த சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டு சேவை மற்றும் அதற்கு நிகரான 2500 டோக்கன்கள் நேற்றையதினம் (27) வழங்கப்பட்டன. கடவுச்சீட்டு பெறுவதற்காக சிலர் வெளியில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அலுவலகத்தில் கடும் நெரிசல்
கடவுச்சீட்டு பெறுவதற்கு தினமும் சுமார் 2500 பேர் வரவழைக்கப்படுகின்றனர். மக்கள்கூட்டம் காரணமாக திணைக்கள வளாகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் வெளியில் தங்கியிருந்த மக்களுக்கும் திணைக்களத்தின் பாதுகாப்புக்காகச் செயற்படும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.