முல்லைத்தீவில் பதற்றம்-ஓ.எம்.பி அலுவலக விசாரணை அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தி எதிர்ப்பு நடவடிக்கை!

Tamils Mullaitivu Sri Lanka
By Pakirathan Dec 19, 2022 12:11 PM GMT
Report

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலக விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் காணாமல் போனோர் அலுவலகத்தின் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி தங்களது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

244 பேருக்கு விசாரணைக்கு அழைப்பு

முல்லைத்தீவில் பதற்றம்-ஓ.எம்.பி அலுவலக விசாரணை அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தி எதிர்ப்பு நடவடிக்கை! | People Protest Office On Missing Person Officers

முல்லைத்தீவு மாவட்ட காணாமல் போனோர் அலுவலகத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

காணாமல் போனோர் அலுவலகத்தினால் விசாரணைகள் நடத்துவதற்காக 19 மற்றும் 20ம் திகதிகளில் 244 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு உள்ளிட்ட ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 244 பேருக்கே இவ்வாறு விசாரணைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவு அலுவலம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தடுத்து நிறுத்தப்பட்ட ஓ.எம்.பி அதிகாரிகள் வந்த வாகனம்

முல்லைத்தீவில் பதற்றம்-ஓ.எம்.பி அலுவலக விசாரணை அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தி எதிர்ப்பு நடவடிக்கை! | People Protest Office On Missing Person Officers

இன்று விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாரும் விசாரணைக்கு செல்ல வேண்டாம் என்றும் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுதிரண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிகாரிகள் வந்த வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

குறித்த சம்பவத்தால், மற்றுமொரு வாகனத்தில் வந்த அதிகாரிகள் மாற்று பாதை ஊடாக உள்ளே சென்ற நிலையில், மக்கள் உள்ளே சென்று அதிகாரிகளை வெளியே சென்று பதிலளிக்குமாறு தெரிவித்து அனைவரையும் வெளியே அழைத்தனர்.

பதாதைகளை ஏந்தியும் எதிர்ப்பு 

முல்லைத்தீவில் பதற்றம்-ஓ.எம்.பி அலுவலக விசாரணை அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தி எதிர்ப்பு நடவடிக்கை! | People Protest Office On Missing Person Officers

உறவுகள், தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டும், கொடுப்பனவுகளை கொடுப்போம் என்று சொல்வது கொலை செய்த கதையை மறைக்கவே, நீங்க கொண்டு சென்ற எங்கள் பிள்ளைகள் எங்கே? என்ற வார்த்தைகளைக் கொண்ட பதாதைகளை ஏந்தி இருந்தனர்.

பேச்சுவார்த்தை

முல்லைத்தீவில் பதற்றம்-ஓ.எம்.பி அலுவலக விசாரணை அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தி எதிர்ப்பு நடவடிக்கை! | People Protest Office On Missing Person Officers

இறுதியாக அதிகாரிகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த விசாரணையை நிறுத்துமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கூறியநிலையில், விசாரணைகள் எதுவும் செய்யவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுவரை, விசாரணைகளுக்கு எவரும் செல்லாத நிலையில் அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தாலும் இதுவரை எவ்வித விசாரணைகளும் இடம்பெறவில்லை.

அச்சுறுத்தப்பட்ட போராட்டக்காரர்கள் 

முல்லைத்தீவில் பதற்றம்-ஓ.எம்.பி அலுவலக விசாரணை அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தி எதிர்ப்பு நடவடிக்கை! | People Protest Office On Missing Person Officers

இதேவேளை, சம்பவ இடத்திற்கு அதிகளவான காவல்துறை மற்றும் புலனாய்வாளர்கள் வந்த நிலையில், தங்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.      

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்