அரசுக்கு பணம் கொடுப்பதை நிறுத்திய வங்கிகள்
பொதுச் செலவினங்களை ஈடுசெய்யும் வகையில் இலங்கை மக்கள் வங்கி(peoples bank) மற்றும் இலங்கை வங்கி(bank of ceylon) என்பன அரசாங்கத்திற்கு வழங்கி வந்த பண கொடுக்கலை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திறைசேரியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அரச வருமானத்தை அதிகரிப்பதன் மூலமும், அரச செலவினங்களை சிறப்பாக நிர்வகிப்பதன் மூலமும் இந்த நிலைமை எட்டப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(ranjith siyambalapitiya) தெரிவித்தார்.
பொருளாதாரத்திற்கு கிடைத்த விசேட சாதனை
மேலும் பல சவால்களுக்கு மத்தியில் திறைசேரி 2023 ஆம் ஆண்டு இந்த நிலையை அடைந்துள்ளதாகவும், இது இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு கிடைத்த விசேட சாதனை எனவும் அவர் தெரிவித்தார்.
மோசமான நிதி நெருக்கடி
இன்று பொருளாதாரம் ஓரளவு முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும், நீண்டகாலமாக நாட்டில் நிலவிய மோசமான நிதி நெருக்கடி தற்போது ஓரளவுக்கு மறைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 4 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)