மகளுக்கு முன்பாக உயிரிழந்த தாய் - கணவனை பிடித்தவாறு உயிரைவிட்ட மனைவி - ஈக்களை போல் உயிரிழக்கும் மக்கள்

srilanka corona death people
By Sumithiran Aug 14, 2021 11:39 PM GMT
Report

அவிசாவளை மாவட்ட பொது மருத்துவமனையில் கொரோனா விடுதியில் சலிக்காது பணியாற்றும் மருத்துவர் நஜித் இந்திக என்பவர் கொரோனா தொற்றாளர்கள் அதனால் ஏற்படும் மரணங்களை வலி நிறைந்த வேதனையுடன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அவிசாவளை மாவட்ட பொது மருத்துவமனை தொடங்கப்பட்ட நாளிலிருந்து நான் கொரோனா விடுதியில் பணியாற்றி வருகிறேன். நாம் 12 மருத்துவர்கள் கொரோனா விடுதிகளில் வேலை செய்கிறோம். இப்போது அவை நிரம்பி விட்டன. தினமும் 100 கொவிட் நோயாளர்கள் கதிரைகள் மற்றும் தரையில் சிகிச்சை பெறுகின்றனர்.

வேலை தொடர்பான மன அழுத்தம் பற்றி நான் கேள்விப்பட்டு படித்திருந்தாலும் அது உண்மையில் என்னவென்று இப்போதுதான் உணர்கிறேன். இதுவரை வந்த கொரோனா நோயாளர் எண்ணிக்கை, அவர்கள் சிரமப்படும் விதம், ஒட்சிசன் கொடுக்கப்பட வேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கை, சிரமப்படும் நோயாளிகளின் வயது…இவை அனைத்தும் ஒரே வாரத்தில் மாறின.

அது ஒரு பெரிய வித்தியாசம். விடுதியில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் எண்ணிக்கை 3 மடங்கிலும் அதிகம்.

எழுபது, எண்பதுகளின் பெற்றோர்கள் முன்பு கொஞ்சம் கடினமாக இருந்தனர், இப்போது அது முப்பது மற்றும் நாற்பது வயதுடையவர் களுக்கு கடினமாக உள்ளது. இன்னும் இன்னும் ஒட்சிசன் விநியோக இயந்திரங்கள் உச்சபட்ச நிலையில் இயங்கினாலும் கூட மக்கள் இறப்பதற்காக காத்திருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாற்பது வயதுள்ள ஒரு தாய் தனது மகளுக்கு முன்பாக மூச்சுத்திணறலால் இறந்தார், CPAP இயந்திரம் பொருத்தப்பட்டு பேச முடியாத ஒரு மனைவி தன் கணவனைப் பிடித்தவாறு விடைபெற்றார். தனது மனைவி இரட்டைக்குழந்தையைப் பிரசவிக்க தயாராகிக் கொண்டிருந்த போது அவரது 27 வயது கணவன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பப்பட்டார். அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

இவை அனைத்தும் ஒரே நாளில் நடக்கும் போது நான் உணரும் கனம், கடினத் தன்மை, பிரச்சினை, அதிக வேலை….இந்தச் சுமை என் தலையில் உணரப்பட்டது. அனைத்திலும் கடினமான பகுதி மக்கள் இறக்கும் போது, அவர்கள் கடினமாக மூச்சுவிடும் போது “எம்மை நாம் காப்பாற்ற ஏதாவது செய்யப் போகிறோமா?”என்பதே.

முன்பு ஓரிரு நாட்களில் இறப்புகள் தற்போது ஒரு வாரத்தில் ஒரு நாளில் 4, 5ஆக மாறியுள்ளன. இந்த வீதத்தில் இன்னும் இரண்டு வாரங்களுக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், ஒட்சிசன் சிலிண்டர் இல்லாததால் மக்கள் கதிரைகளிலும், தரையிலும் முற்றத்திலும் இறந்து விடுவார்கள். முடிந்தவரை கவனமாக இருங்கள்… மக்கள் ஈக்களைப் போல் இறக்கிறார்கள். கடந்த மாதம் 12 மருத்துவர்களில் ஒருவரும் 30 தாதிகளில் 10 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.    

ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026