மற்றுமொரு பேராதனை பல்கலை மாணவன் உயிரிழப்பு!
Sri Lanka Police
University of Peradeniya
By pavan
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பம்பரகந்த நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (17) காலை இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து பேர் கொண்ட குழுவொன்று உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்த போது கால் வழுக்கி இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறை விசாரணை
பேராதனை பல்கலைக்கழகத்தில் 03ஆம் ஆண்டில் கல்வி கற்கும் சசங்க விக்கும் விதாரண என்ற 25 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பானஹல்துமுல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
