யாழ்ப்பாணத்தில் குளித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்
யாழ்ப்பாணத்தில்(jaffna) குளித்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதன்போது வவுனியா(vavuniya) - தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த வடிவேலு சற்குணராசா (வயது 61) என்பவரே உயிரிழந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குளித்துக் கொண்டிருந்தவேளை மயங்கிச்சரிவு
குறித்த நபரும் அவரது மனைவியும் இன்றையதினம்(25) மரணச் சடங்கு ஒன்றில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதிக்கு வந்திருந்தனர்.
பின்னர் பகல் 1.30 மணியளவில் அருகில் இருந்த வீட்டிற்கு சென்று குளித்துக்கொண்டிருந்தவேளை அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி 2.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சடலம்
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்