மைத்திரிக்கு எதிரான மனு தாக்கல்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு (Maithripala Sirisena) எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மொண்டேகு சரத்சந்திர (Montague Sarachandra) இந்த மனுவை சமர்பித்திருந்ததுடன், மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளான நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து தனது கட்சிக்காரர் ஏற்கனவே பதவிவிலகல் செய்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.
இடைக்காலத் தடையுத்தரவு
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதியரசர் குழாம் , சம்பந்தப்பட்ட மனுவை எதிர்வரும் செப்டம்பர் 02 ஆம் திகதி பரிசீலிக்க உத்தரவிட்டார்.
முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு கொழும்பு (Colombo) மாவட்ட நீதிமன்றம் நிரந்தர இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரத்சந்திர இந்த மனுவை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |